Last Updated:
உணவுக்கு கூட அந்த அளவிற்கு முக்கியதுவம் கொடுக்க மாட்டார்.. ஆனால் சிறு வயதில் இருந்து பால் பேட் சற்று இடம் மாறி இருந்தாலும் ஃபீல் செய்வார்..
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் தமிழக வீரர் அம்ரீஷ் சிறப்பாக 9 ஓவர்கள் பந்து வீசி 1 மெய்டனுடன் 56 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 411 ரன்கள் குவித்தது. அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் அம்ரீஷ் குறித்து அவரது தாயார் சுபாஷினி கூறுகையில், அவருடைய முயற்சிக்கு ஒரு அங்கீகாரம் முதல் முறை கிடைத்திருப்பது என்பது ஒரு எமோஷனலா சந்தோஷமாக இருக்கிறது. அதை வார்த்தையால் சொல்ல முடியவில்லை. ரொம்ப பெருமையாக இருக்கிறது.
அம்ரீஷ் மூலமாக அவங்க அப்பாவின் கனவு முயற்சி வெளிவருவது சந்தோஷமாக இருக்கு… பள்ளிக்கு தினமும் காலை 5 மணிக்கு ஆட்டோ வந்துடும், ஒவ்வொரு நாளும் இரண்டு வகையான ஸ்நாக்ஸ் கொடுப்பேன்… சுண்டல் மற்றும் அம்ரீஷ்- க்கு பிடித்தது ஒன்று. சில உணவுகள் பிடிக்காது ஆனால் வேற வழியில்லாமல் சாப்பிடுவார்..
கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்ததால் அனைத்தையும் பழகி கொண்டார்…. வீட்டுக்கு வந்தாலும் பந்து மற்றும் கிரிக்கெட் பேட் கையில் இருந்து விட மாட்டார்.. வீட்டிற்கு வந்த பிறகும் பேட் பால் இல்லாமல் தூங்குவதை கூட பார்க்க முடியாது..
சரியான பாதையில் செல்கிறான் என தெரிந்த பின்னர் நாங்கள் அப்படியே விட்டு விட்டோம்…. ஒவ்வொரு போட்டியும் முடிந்த பிறகு முதல் போன் எனக்கு தான் செய்வார். அதன் பின்னர் அவங்க அப்பாவிற்கு செய்வார்…
பீலிங்ஸ் என்னிடம் சொல்லி விட்டு பின்னர் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொள்வார்… அப்பா – மகன் இருவரும் கிரிக்கெட் வீரர் என்பது முதலில் ரொம்ப பயமாக இருந்தது…. காரணம் அம்ரிஷின் அப்பா நிறைய கஷ்டங்களை சிறு வயதில் கடந்து இருக்கிறார்.. நெருங்கிய சொந்தங்கள் யாரும் கிரிக்கெட் செல்வது தவறு என்று சொல்லவில்லை.. உணவுக்கு கூட அந்த அளவிற்கு முக்கியதுவம் கொடுக்க மாட்டான் ஆனால் சிறு வயதில் இருந்து பால் பேட் சற்று இடம் மாறி இருந்தாலும் ஃபீல் செய்வான்.. என்று தெரிவித்தார்.


