[ad_1]
Last Updated:
கடந்த 4 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.
ஜி.எஸ்.டி.யில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் அதிக வலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இன்று புதுடெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், நான்கு அடுக்குகளுக்கு பதிலாக இனி 5%, 18% என இரண்டு அடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், பால், பனீர், பீஸா, பிரட், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18 தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
கடந்த 4 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. கொரோனாவால் மோசமடைந்த பொருளாதார நிலையை ஏற்றுக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உலகின் சிறந்த பொருளாதார நாடாக இந்தியாவை கட்டமைத்து வருகிறார்.
இந்திய தொழில்கள் மீது பிரதமர் மோடி எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். ஜி.எஸ்.டி. சீர் திருத்தங்கள் வர்த்தக துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய சீர்திருத்தங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
பாசிடிவான அரசை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். தேசிய நலனுக்கு அவர் முன்னுரிமை அளிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
September 04, 2025 7:10 PM IST
Exclusive : ஜிஎஸ்டியில் புதிய சீர்திருத்தங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி