Last Updated:
சண்டை நிறுத்தத்தை மீறி ஜம்முவில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதன் பிரத்யேக வீடியோ காட்சி நியூஸ்18-க்கு கிடைத்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதனை மீறி ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தக்கப் பதிலடியை கொடுத்துள்ளது.
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படைதளத்துக்குச் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார். பின் அங்கு உரையாற்றிய அவர், “அணு ஆயுத பிளாக் மெயிலுக்கு அடி பணிய மாட்டோம். பாகிஸ்தானின் அணு ஆயுத மோசடியை நாங்கள் கடுமையாக சாடினோம். அணு ஆயுதத் தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன். தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவும் நாடுகளையும் பிரித்து பார்க்க மாட்டோம். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கிக் கொள்ள இடம் இல்லாத அளவுக்கு தாக்கியுள்ளோம். வெறும் 20 நிமிடங்களில் 9 தீவிரவாத முகாம்களை தகர்த்தெறிந்துவிட்டோம். நாம் தீவிரவாத முகாம்களை அழித்ததுடன் பாகிஸ்தான் ராணுவத்தையும் தோற்கடித்துள்ளோம்.
நாங்கள் எதிரிகளின் குகைக்குள் நுழைந்து அவர்களின் முகாம்களை அழித்தோம். பாகிஸ்தானின் தீய திட்டங்கள் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தன. நாட்டுக்காக தங்களது இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர்” என பேசியிருந்தார்.
இந்நிலையில், ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் சுமார் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த வீடியோ பிரத்யேகமாக நியூஸ்18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.
இந்தப் பதிலடியில், இந்திய ராணுவ வீரர்கள் குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 20 பயங்கரவாதிகளும், 10 முதல் 12 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Jammu and Kashmir
Exclusive: சண்டை நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்.. பதிலடி தந்த இந்தியா.. நியூஸ்18-க்கு கிடைத்த பிரத்யேக காட்சி


