Last Updated:
2015-ம் ஆண்டு மே மாதம் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், தலாய் லாமாவை இரவு விருந்திற்கு அழைப்பது குறித்து எப்ஸ்டீன் ஆலோசித்ததாகக் குறிப்புகள் உள்ளன.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் 169 முறை , திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பெயர் இடம்பெற்ற நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை கடந்த மாதம் வெளியிட்டது.
இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக பணக்காரர்கள் பில்கேட்ஸ், எலான் மஸ்க், மைக்கேல் ஜாக்சன் உள்பட புகழ்பெற்ற பல தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
எப்ஸ்டீனின் மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்களில் ‘தலாய் லாமா’ என்ற பெயர் 169 முறை குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக, 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாத மின்னஞ்சல் ஒன்றில், ஒரு தீவில் நடைபெறும் நிகழ்வில் எப்ஸ்டீனும், தலாய் லாமாவும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2015-ம் ஆண்டு மே மாதம் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், தலாய் லாமாவை இரவு விருந்திற்கு அழைப்பது குறித்து எப்ஸ்டீன் ஆலோசித்ததாகக் குறிப்புகள் உள்ளன.
இந்தப் புகார்களைத் தலாய் லாமாவின் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்த எக்ஸ் பதிவில், புனிதத் தலைவர் தலாய் லாமா, ஜெப்ரி எப்ஸ்டீனை ஒருபோதும் சந்தித்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

