• Login
Monday, January 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

EOS-N1 செயற்கைக்கோள் PSLV-C62 மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.. சிறப்பம்சங்கள் என்னென்ன? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 11, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
EOS-N1 செயற்கைக்கோள் PSLV-C62 மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.. சிறப்பம்சங்கள் என்னென்ன? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 11, 2026 3:08 PM IST

EOS-N1 செயற்கைக்கோள், Anvesha என அழைக்கப்படுகிறது, PSLV-C62 மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை ஏவப்படுகிறது. ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் முக்கிய அம்சம்.

Rapid Read
EOS-N1 செயற்கைக்கோள்
EOS-N1 செயற்கைக்கோள்

புவி கண்​காணிப்​புக்​காக தயாரிக்கப்பட்டுள்ள “EOS-N1” செயற்​கைக்​கோள், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நாளை ஏவப்படுகிறது. இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

EOS-N1 Earth Observation Satellite – Next Gen 1 என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள அடுத்த தலைமுறை புவி கண்காணிப்பு செயற்கைக்கோள். இந்த செயற்கை கோள் அன்வேஷா (Anvesha) என்றும் அழைக்கப்படுகிறது. அன்வேஷா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘தேடுதல்’ அல்லது ‘ஆராய்ச்சி’ என்று பொருள்.

EOS-N1 செயற்கைகோள் வரும் திங்கள் கிழமை காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV-C62 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோளில் உள்ள ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் இமேஜிங் தான் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. சாதாரண செயற்கைக்கோள்கள் ஒளியின் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களை மட்டுமே பிரித்து பார்த்து வண்ணப் படங்களை உருவாக்குகின்றன.

ஆனால், EOS-N1 செயற்கை கோள் ஒளியின் நூற்றுக்கணக்கான நுணுக்கமான அலைநீளங்களைப் பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டது. பூமியின் மிகச்சிறிய பொருள்களைக் கூட அடையாளம் காணும் வகையிலான அதிநவீன உணரிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. EOS-N1 பல துறைகளில் இந்தியாவின் “விண்வெளிக் கண்ணாக” இனி செயல்பட உள்ளது.

எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் பதுங்கு குழிகள், கூடாரங்கள் அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கண்டறியும். இதன் ‘ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல்’ தொழில்நுட்பம், காடுகள் அல்லது மலைகளுக்கு அடியில் மறைக்கப்பட்டுள்ள உலோகப் பொருட்களை அவற்றின் வெப்பம் மற்றும் ஒளி எதிரொலிப்பு மூலம் கண்டுபிடித்துவிடும். பயிர்களில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு, பூச்சித் தாக்குதல் போன்றவற்றை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய உதவும்.

மண்ணில் உள்ள தாதுக்கள் மற்றும் ஈரப்பதத்தின் அளவைத் துல்லியமாகக் கணிக்கும். இது மட்டுமல்லாமல், கடல் நீர் மாசுபாடு, காடுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கனிம வளங்களை தேடுதல் போன்ற பணிகளையும் செய்யும். வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படும் போது, மேகமூட்டங்களுக்கு இடையிலும் பாதிப்புகளைக் கணிக்க உதவும். EOS-N1 அனுப்பும் தரவுகள் மிக அதிகமாக இருப்பதால், மனிதர்கள் அதைப் பகுப்பாய்வு செய்வது கடினம். எனவே, இதற்காக பிரத்யேக மென்பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல் நாள் வசூலில் 6 முறை ரூ. 100+ கோடி ஈட்டிய ஒரே இந்திய நடிகர்… பாக்ஸ் ஆஃபிஸ் கிங் – வேறு எவரும் செய்யாத சாதனை!

எல்லைப் பகுதிகளில் புதிய மாற்றங்கள் ஏதும் உண்டா?, பயிர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது?, நிலத்தடி நீர் மட்டம் எங்கு அதிகமாக உள்ளது? என்பன போன்ற தகவல்கள் நொடிகளில் பிரித்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். PSLV-C62 ராக்கெட் மூலம், 18 சிறிய செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன. இதில் முக்கியமானது AayulSAT, விண்வெளியிலேயே செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் இந்தியாவின் முதல் முயற்சியாக இந்த செயற்கைகோள் செலுத்தப்படுகிறது.

மற்றொன்று ஸ்பெயின் நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கியுள்ள KID எனப்படும் சிறிய விண்கலம், விண்வெளியிலிருந்து மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பும் தொழில்நுட்பத்தைச் சோதிக்க உள்ளது. EOS-N1 செயற்கைக்கோள் வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், விண்வெளியில் இருந்து உளவு பார்க்கும் மற்றும் புவியைக் கண்காணிக்கும் திறனில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணையும்.

Read More

Previous Post

அறுகம்பையில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு

Next Post

ராவாங் அருகே விரைவு பேருந்தும் லோரியும் மோதிய விபத்தில் உயிரிழந்த துணை காவலர் | Makkal Osai

Next Post
ராவாங் அருகே விரைவு பேருந்தும் லோரியும் மோதிய விபத்தில் உயிரிழந்த துணை காவலர் | Makkal Osai

ராவாங் அருகே விரைவு பேருந்தும் லோரியும் மோதிய விபத்தில் உயிரிழந்த துணை காவலர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin