Last Updated:
இந்திய அணியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்திய அணியுடனான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, 4ஆவது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
காயம் காரணமாக விலகிய சுழற்பந்துவீச்சாளர் ஷோயப் பஷீருக்குப் பதிலாக லியாம் டாசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 35 வயதான டாசன் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். உள்ளூர் முதல்தர போட்டிகளில் அசத்தியதால் இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றபடி ஆடும் லெவனில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.
மேலும் இந்திய அணியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் அணிக்கு திரும்பலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்
July 16, 2025 8:52 AM IST


