Last Updated:
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் 387 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 387 ரன்களில் ஆட்டமிழந்தது.
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்த், இந்த போட்டியிலும் அரைசதம் கடந்து 74 ரன்கள் சேர்த்திருந்த போது, அவசியமின்றி ஒரு ரன்னுக்காக ஓடியபோது, ஸ்டோக்ஸின் துல்லிய த்ரோவால் ரன் அவுட் ஆனார்.
இதையடுத்து ஜடேஜா 72 ரன்களும் எடுத்து கைகொடுத்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தாலும், பேட்டிங்கில் 10-ஆவது வீரராக களமிறங்கிய பும்ரா டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். டெஸ்ட் போட்டிகளில் கடந்த 7 இன்னிங்ஸ்களில் பumரா 6-ஆவது முறையாக டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 387 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளிலும் ஒரு இன்னிங்ஸில் சம அளவிலான ரன்களில் ஆல்-அவுட் ஆவது இது 9-ஆவது முறையாகும்.
இதையடுத்து மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 1 ஓவர் மட்டுமே விளையாடி 2 ரன்களை சேர்த்தது. இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில், போட்டி இரு அணிகளுக்கும் சாதகமான நிலையில் தான் உள்ளது. இன்று இங்கிலாந்து வீரர்களின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
July 13, 2025 8:39 AM IST


