Last Updated:
Egg Price| திடீரென உயர்ந்த முட்டை விலை. விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பதை இங்கு காணலாம்.
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. ரூ. 4.75 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 5 பைசா உயர்ந்து ரூ. 4.80 ஆனது. இந்த நிலையில், என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை வெயிலின் காரணமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 23, 2025 12:00 PM IST

