Last Updated:
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாகிறார் தீரஜ் சேத் யார் என்பது பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக உள்ள உபேந்திர திவேதி வரும் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில் புதிய தலைமைத் தளபதியாக தீரஜ் சேத்-ஐ நியமிக்க, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, துணை தலைமை தளபதியாக பணியாற்றி வரும் தீரஜ் சேத், மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் முடித்தவர்.
The Government has appointed Lieutenant General Dhiraj Seth, PVSM, UYSM, AVSM, presently serving as the Vice Chief of the Army Staff, as the next Chief of the Army Staff in the substantive rank of General with effect from the afternoon of 30 June 2026.
An alumnus of the National… pic.twitter.com/RExcCKjWJh— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) June 13, 2026
1986 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்த அவர், பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் தலைமைப் பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு சவால் மிகுந்த பணிகளை திறம்பட கையாண்டவர் தீரஜ் சேத். இந்நிலையில், வரும் 30 ஆம் தேதி ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கும் தீரஜ் சேத், 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இப்பதவியில் நீடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


