Last Updated:
டெல்லி செங்கோட்டை அருகே Subash Marg சிக்னலில் Hyundai i20 கார் குண்டு வெடிப்பு, 13 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம்; அமித்ஷா நேரில் செல்கிறார்.
“இன்று மாலை 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் குண்டு வெடித்தது. விரைவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிடுகிறேன்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 பகுதி அருகே இன்று மாலை சுமார் 7 மணி அளவில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். 13 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தைத் தொடர்ந்து டெல்லி உட்பட இந்தியா முழுக்க பாதுகாப்பு சோதனைகள் வலுப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கத்தில், “இன்று மாலை 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சில பாதசாரிகள் காயமடைந்தனர் மற்றும் சில வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடமும் நான் பேசியுள்ளேன். டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளர் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம். மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை மேற்கொள்வோம். மேலும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். நான் சம்பவ இடத்திற்குச் செல்கிறேன். மேலும், உடனடியாக மருத்துவமனைக்கும் செல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
November 10, 2025 9:39 PM IST


