Last Updated:
தமிழகத்தில் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகமும் பாதிப்படையுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும் அதாவது முன் பதிவு செய்யும் குறைந்தபட்ச காலத்தையும் அதிகப்படுத்தி இருக்கின்றனர். அதாவது முன்பெல்லாம் குறைந்தபட்ச முன்பதிவு நாட்களாக 21 நாட்கள் இருந்தது.
இந்நிலையில் தற்போது சிலிண்டர் தட்டுப்பாட்டின் காரணமாக 25 நாட்களாக உயர்த்தி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கூடுதலாக சிலிண்டருக்கு ரூபாய் 60 உயர்த்தப்பட்டிருப்பது மேலும் பொது மக்களை அச்சப்பட செய்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பலமுறை முன் பதிவு செய்ய முயற்சித்தும் முன்பதிவு ஆகவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் தெரிவித்ததாவது; தமிழகத்தில் தற்போது வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை வீட்டு உபயோக செய்தவர்களுக்கு மந்திரமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. அண்மையில் தான் சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டது. இன்னிலையில இந்த சென்டர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. இதே நிலை நீடித்தால் நாங்கள் மீண்டும் விறகு அடுப்பிற்கு செல்ல வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். இப்ப இருக்கக்கூடிய காலகட்டத்தில் விறகு அடுப்பு சமைப்பதை நினைத்தாலே மிகவும் பயமாக உள்ளது. வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மீண்டும் விறகு அடுப்பில் அல்லது மின் அடுப்பில் சமைக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளோம். அந்த நிலை ஏற்பட்டாலும் அதனை தவிர்க்க முடியாது எந்த நிலை வந்தாலும் அதனை ஏற்கும் மன தைரியம் வேண்டும்.
முக்கியமாக பெண்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகுவார்கள். எங்களைப் போன்ற இல்லத்தரசிகள். இந்த அச்சம் காரணமாக நாங்களும் முன்பதிவு செய்ய முயற்சித்து வருகிறோம் இருந்தபோதிலும் முன்பதிவு கூட எளிதாக செய்ய முடியவில்லை. ஓரிரு சிலிண்டர்கள் எதற்கு முன்கூட்டியே பிடித்து வைத்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் முன் பதிவு செய்ய முயற்சித்தாலும் முன்பதிவு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக மேலும் அச்சமடைய செய்கிறது. இதற்கு பொதுமக்களின் நலத்தினை கருத்தில் கொண்டு மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த வணிக சிலிண்டர்கள் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் தட்டுப்பாட்டினை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றனர் பொதுமக்கள்.
Mar 13, 2026 10:21 AM IST

