Last Updated:
கபடி நாடு முழுவதும் மக்களை கவர்ந்து, இந்தியாவில் இரண்டாவது அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டாக மாறியது
ஜியோஸ்டார் நிறுவனத்தின் Head – Viewership and Monetisation Initiatives – Sports பதவியை வகிக்கும் சித்தார்த் சர்மா, “Cricketainment and Beyond – The Power of Live that Fuels M&E” என்ற தலைப்பில் நடைபெற்ற குழு கலந்துரையாடலில் உரையாற்றினார். நேரடி விளையாட்டு, ஒளிபரப்பு மற்றும் தொழில்நுட்பம் இணைந்து ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (M&E) துறையின் அடுத்த வளர்ச்சிக் கட்டத்தை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
விளையாட்டு ஒளிபரப்பின் பயணத்தை ரேடியோ காலத்திலிருந்து இன்றைய டிஜிட்டல் சூழலுக்கு வரையிலும் விளக்கி, சித்தார்த் சர்மா பேசியதாவது:
“1983ல் ஒரு தொலைக்காட்சியைச் சுற்றி மக்கள் கூடிய காலத்திலிருந்து இன்றுவரை, ஒவ்வொரு ரசிகரும் தங்கள் பார்வை அனுபவத்தைத் தாங்களே வடிவமைக்கக்கூடிய நிலையில் வந்துவிட்டார்கள். பார்வையாளர்கள் இன்று எப்படி, எப்போது, எங்கே பார்க்க வேண்டும் என்பதைக் குறித்த முடிவைத் தாங்களே எடுக்கிறார்கள். அதுவே ரசிகத்தனத்தின் வரையறையை மாற்றியமைத்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI), தரவு பகுப்பாய்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்கும் தொழில்நுட்பங்கள் பலமொழி கருத்துரைகள், மாற்று கேமரா கோணங்கள் மற்றும் இரண்டாம் திரை அனுபவங்கள் போன்றவற்றின் மூலம் நேரடி விளையாட்டை மேலும் ஈர்க்கக்கூடியதாகவும் பங்குபெறும் வகையிலும் மாற்றி வருகின்றன.
இப்போது பார்வையாளர்கள் வெறும் நோக்கும் நிலையில் இல்லை; அவர்கள் கதை சொல்லும் செயலின் ஓர் அங்கமாகி விட்டார்கள். அதுவே ‘லைவ்’ என்பதன் உண்மையான சக்தி. என்று தெரிவித்தார்.
மேலும், இந்திய பாரம்பரிய விளையாட்டுகளின் வளர்ச்சியைப் பற்றியும் சித்தார்த் சர்மா பகிர்ந்து கொண்டார். குறிப்பாக கபடியுடன் அவருக்குள்ள ஆழ்ந்த பிணைப்பைப் பற்றி அவர் உரையாடியபோது, அதனை பாரம்பரிய விளையாட்டுகளை நவீன பார்வையாளர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்திய ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறினார்.
“கபடி எனக்குப் மிகவும் நெருக்கமானது. இதைப் பற்றி பேசும்போது என் இதயத்திலிருந்து பேசுகிறேன். ஆரம்பத்தில் நாமே இந்த விளையாட்டை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகத்துடன் இருந்தோம்.
October 10, 2025 4:19 PM IST