[ad_1]
நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பா.ஜ. எம்.பி. கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் வாக்களித்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.