“வேலை செய்வதுபோல காட்டிக்கொள்வதற்கான” நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகி வருவது கவலையளிப்பதாகவும், வேலையின்மையை கையாள இது மிகவும் மோசமான வழி என்றும் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
இது வெற்றியாளராக இருப்பதற்கான சமூக அழுத்தம், வேலையின்மையால் ஏற்படும் களங்கத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்கின்றனர்.
நிறுவனங்களின் லே ஆஃப் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஊழியர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும் என்பதால் திடீரென வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது கவலை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

