கடந்த ஜூலை 17-ம் தேதி தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கறிக்கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும் எனவும் கறிக்கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்களை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது கோரிக்கையை ஏற்காததை கண்டித்து ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.


