கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் நேற்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கனடாவின் அரசியல் சூழல் பரபரப்பாகியிருக்கிறது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், “கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைவதை கனடாவில் வசித்து வரும் பலரும் விரும்புவார்கள். வர்த்தக ரீதியான அழுத்தங்களை அறிந்தே ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் குறையும். மேலும், ரஷ்ய மற்றும் சீன கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றிணைவோம்.

அது பெரிய தேசமாக இருக்கும். நீங்கள் செயற்கையாக வரையப்பட்ட கோடுகளிலிருந்து விடுபட்டு, அந்த மாற்றம் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். மேலும் இது தேசிய பாதுகாப்பிற்கும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்களிடம் மிகச் சிறிய இராணுவமே உள்ளது. அவர்கள் எங்கள் இராணுவத்தைதான் நம்பியிருக்கிறார்கள். அதற்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும்” என்றார்.

