கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங்கின் திட்டமிடப்பட்ட சந்திப்பு நேற்று நிகழ்ந்துள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த செவ்வாய்கிழமை, பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு சென்றார். அவர் ரஷ்யாவிற்கு சென்ற முதல் நாளிலேயே மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்துக்கொண்டனர். அப்போது, அவர்களுக்கு இடையே சமூகமான மற்றும் நட்பார்ந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்தித்து பேசிக்கொள்வார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு இந்தியா, சீனாவில் மட்டுமல்லாமல், உலகளவில் கவனிக்கப்பட்டது.

