Last Updated:
சுமார் 200 பழங்குடி இனங்களை சேர்ந்த 7,000 பழங்குடியின மக்கள் இதில் பங்கேற்றனர்.
பிரேசில் நாட்டு தலைநகரில் பழங்குடியின நிலங்களை விரைவில் வரையறுக்க கோரி பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
பிரேசிலியாவில் நடைபெற்ற பேரணியில் பாரம்பரிய உடையணிந்து பொதுமக்கள் பங்கேற்றனர். பழங்குடியின மக்களின் நிலங்களை விரைவாக வரையறுத்து தங்கள் உரிமையை காக்கவும், தங்கள் பகுதிகளில் நடக்கும் வன்முறைகளை தடுக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
பிரேசில் போராட்டம்
சுமார் 200 பழங்குடி இனங்களை சேர்ந்த 7,000 பழங்குடியின மக்கள் இதில் பங்கேற்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு விரைவில் அதிபர் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரமாண்ட பேனாவை அவர்கள் உடன் வைத்திருந்தனர்.
பாரம்பரிய உடையணிந்து பிரமாண்ட பேரணியில் ஈடுபட்ட மக்கள்… பிரேசில் தலைநகரில் நடந்தது என்ன?


