2004-ம் ஆண்டு, இந்த சம்பவத்திற்கும், ராஜீவ் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டே இந்த ஒட்டுமொத்த வழக்கையும் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு அமெரிக்காவிடம் இருந்து போஃபர்ஸ் ஊழல் சம்பந்தமான தகவல்களை கோரியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் உளவு துறை ஏஜென்சி Firmfax-ன் இந்த ஊழல் சம்பந்தமான தகவல்கள் தற்போது அமெரிக்காவிடம் உள்ளது. இந்தத் தகவல்களை கேட்டு அமெரிக்க நீதி துறைக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது சி.பி.ஐ.

அமெரிக்காவைச் சேந்த தனியார் உளவுத்துறையின் ஏஜென்சி ஃபிரிம்ஃபேக்ஸ்-ன் தலைவர் மைக்கேல் ஹெர்ஷ்மேன். கடந்த 2017-ம் ஆண்டு, இவர் போஃபர்ஸ் ஊழல் பற்றி பேசும்போது, இந்த ஊழலில் பணமாக 64 கோடி ரூபாய் சுவிஸ் வங்கி கணக்கு ‘மான்ட் பிளான்க்’கில் வைத்திருப்பதை தெரிந்துக்கொண்ட ராஜீவ் காந்தி மிகவும் கோபப்பட்டார். அதுக்குறித்து அவர் விசாரிக்க முனைந்தப்போது அப்போதைய அரசு அவரின் முயற்சிகளை தடுத்துவிட்டது என்று கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு, ஃபிரிம்ஃபேக்ஸ் நிறுவனம் இந்த ஊழல் சம்பந்தமான தகவல்களை அமெரிக்க அரசிடம் இருந்து பெற டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. அதன் விளைவாக, தற்போது சி.பி.ஐ அமெரிக்க நீதித்துறையை நாடியுள்ளது.

