அமெரிக்காவின் பிரபல இணைய தொழில்முனைவோர், போட்காஸ்டர், எழுத்தாளர் ரீட் காரெட் ஹாஃப்மேன் (Reid Hoffman). இவர் சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான பில்கேட்ஸை பேட்டி எடுத்திருந்தார். அதில் பேசிய பில்கேட்ஸ், “கடினமான விஷயங்கள் ஏராளமாக இருக்கும் ஒரு நாட்டிற்கு இந்தியா ஒரு எடுத்துக்காட்டு. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு அவை போதுமான அளவு நிலையாக உள்ளன. இன்னும் அவை மேம்படவேண்டியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தங்கள் சொந்த அரசுக்கான வருவாயைப் பெறுவார்கள்.

