Last Updated:
“பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில், ஆட்சியமைக்க தேவையான 122 தொகுதிகளைக் கடந்து பாஜக கூட்டணி 203 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி வெற்றி மற்றும் முன்னிலை சேர்த்து வெறும் 35 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் 9 மணி நிலவரப்படி 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 87 இடங்களில் வெற்றியும், 2 இடங்களில் முன்னிலையிலும் என 89 இடங்களிலும், 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் 78 இடங்களில் வெற்றியும், 7 இடங்களில் முன்னிலையிலும் என 85 இடங்களிலும் இருக்கின்றன. இதனால் பீகாரில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
மகாகத்பந்தன் கூட்டணியில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஆறு தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, “பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம். வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
मैं बिहार के उन करोड़ों मतदाताओं का हार्दिक आभार व्यक्त करता हूं, जिन्होंने महागठबंधन पर अपना विश्वास जताया।
बिहार का यह परिणाम वाकई चौंकाने वाला है। हम एक ऐसे चुनाव में जीत हासिल नहीं कर सके, जो शुरू से ही निष्पक्ष नहीं था।यह लड़ाई संविधान और लोकतंत्र की रक्षा की है। कांग्रेस…
— Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2025
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “மகாகத்பந்தன் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம்.
அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டம் தொடரும். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
November 14, 2025 9:58 PM IST
Bihar Election | “பீகாரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது… போராட்டம் தொடரும்” – தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி


