Last Updated:
பிகார் தேர்தலில் 30 பேர் சொந்தக் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் சட்டமன்றத் தேர்தலில் 30 வேட்பாளர்கள் தங்கள் சொந்த கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், 11ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இரண்டு கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஐக்கிய ஜனதாதளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
அதனைத் தொடர்ந்து, 143 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை செவ்வாயன்று ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டது. அதேபோல், கூட்டணி கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
தற்போது வரும் 6ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி மொத்தம் 1,314 வேட்பாளர்கள் 121 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில், இரண்டு கூட்டணியிலும் இருக்கும் அதிருப்தியாளர்களும் சுயேச்சையாக தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இரண்டு கூட்டணியையும் சேர்த்து சுமார் 30 நபர்கள் சுயேச்சையாக தங்கள் கட்சியை எதிர்த்தே வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியில் இணைந்துள்ளனர். கட்சி சார்பில் வேட்பாளர்கள் ஏற்கனவே களத்தில் இருந்துவர அதிருப்தியாளர்களும் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பிகார் தேர்தலில் பரபரப்பை கூட்டியுள்ளது.
October 22, 2025 6:22 PM IST
Bihar Election : சொந்தக் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் 30 நபர்கள்! பிகார் தேர்தல் களத்தில் பரபரப்பு


