நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு பாண்டிச்சேரி சார்ந்த 536 பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் தடகளப் போட்டிகள் துவங்கியது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்கா பாளையத்தில் இயங்கும் தனியார் (எக்சல்)கல்லூரியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 536 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், மொத்தம் 11 மண்டலங்களில் நடைபெற்ற 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர்
960 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டி முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன், மாணவர்கள் மத்தியில் தானும் ஒரு விளையாட்டு வீரர் எனவும் காவல்துறை அதிகாரியிடம் பரிசு பெற்ற போது தானும் ஒரு காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என எண்ணம் கொண்டு தீவிர முயற்சி மேற்கொண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…