மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் தாமதமாக வந்தபோது அவர்களுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் கழித்து பரிசளிப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிறந்த பந்து வீச்சு, ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை இந்திய அணியின் குல்தீப் யாதவ், திலக் வர்மா, அபிஷேக் சர்மா ஆகியோர் விஐபிக்களிடமிருந்து பெற்றனர். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, ரன்னர்களுக்குரிய காசோலையைப் பெற்றார்.


