Last Updated:
ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட அர்ஜுன் டெண்டுல்கர் ஒப்பந்தமாகியுள்ளார்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா சந்தோக் ஆகியோர் திருமணம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
மும்பையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமணத்தில் எம்.எஸ். தோனி, ராகுல் டிராவிட், அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் இந்தத் திருமணக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த வேளையில், மணமகன் அர்ஜுன் டெண்டுல்கர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.
திருமணம் முடிந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே, அதாவது நேற்று, அர்ஜுன் தனது கிரிக்கெட் யூனிஃபார்முடன் மைதானத்திற்குத் திரும்பினார். மும்பையில் நடைபெற்று வரும் ‘டி.ஒய். பாட்டீல் டி20’ தொடரின் அரையிறுதிப் போட்டியில் தனது டி.ஒய். பாட்டீல் ப்ளூ அணிக்காக விளையாட அவர் களமிறங்கினார்.
பொதுவாகத் திருமணத்திற்குப் பிறகு சில நாட்கள் ஓய்வு எடுப்பதே வழக்கம், ஆனால் அர்ஜுன் தனது தொழில்முறை ஆட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக விளையாட வந்தது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்தப் போட்டியில் அர்ஜுனுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை.
பந்துவீச்சில் ஒரு ஓவர் வீசி 20 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், பேட்டிங்கில் 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அவரது அணியும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

