சட்டரீதியாக போராடும் பாஜக
மருத்துவக் கல்லூரி என்பது புதிய மருத்துவர்களை உருவாக்குவதற்காக, அவர்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வசதியாக, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே அன்றி, ஏற்கனவே பொதுமக்கள் பயன்பெற்றுக் கொண்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்பைச் சீர்குலைப்பது அல்ல. ஆனால், திமுக அரசு, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யும் முடிவில் இருந்ததை அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட பாஜகவினர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை முழுவதுமாக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றும் திட்டத்தை எதிர்த்து, அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் தொடர்ந்து செயல்பட வேண்டும், அரசு மருத்துவமனை கட்டிடங்களை, மருத்துவக் கிடங்காக மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2023 ஆம் ஆண்டு மே 17 அன்று போராட்டம் நடத்தினர். இதனால் திமுக அரசு தொடர்ந்த வழக்குகளை சட்டரீதியாக இன்றும் நாகை பாஜகவினர் எதிர்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும், நாகை அரசு தலைமை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யக் கூடாது என்று தொடர் கோரிக்கைகளும், போராட்டங்களும் நடத்தி வந்தனர்.

