கடந்த மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அதில் ஒன்று ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இயக்குநராக, தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் படேலை நியமித்திருக்கிறார்.
ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த, குஜராத்தைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர் காஷ் படேல். நியூயார்க்கில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கி, நீதித்துறையில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர். இவரைத்தான் FBI இயக்குநராக நியமிக்க டொனால்ட் ட்ரம்பால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

