Last Updated:
இந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் கிணறு தொடர்பான பிரச்னையில் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்காவில் தண்ணீருக்காக நடந்த தகராறில் 42 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலம், தண்ணீர், கால்நடைகள் தொடர்பான பிரச்னைகளால் மதக்குழுக்கள், கிராமங்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், வடிபிரா மாகாணம் ஐகொடி கிராமத்தில் கிணற்றில் இருந்த தண்ணீரை பயன்படுத்துவது தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே தகராறு வெடித்தது.

இந்த தகராறு பழிவாங்கும் நடவடிக்கையாக மாறி அண்டை கிராமங்களுக்கும் பரவியது. இதில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டதில் 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கலவரம் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவிய நிலையில், ராணுவம் தலையிட்டு மோதலை கட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை பிரதமர் லிமானே மஹாமத் தெரிவித்துள்ளார். இந்நாட்டில் சமீபத்திய மத மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் கிணறு தொடர்பான பிரச்னையில் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Apr 29, 2026 11:40 AM IST


