யூனோஸ் அவென்யூ 7ல் உள்ள இண்டஸ்ட்ரியல் பகுதியில் பெரிய அளவில் தீ பற்றி எரிந்தது.
பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று பார்க்கும் அளவிற்கு தீ பெரிய அளவில் இருந்தது. அங்கிருந்து வானுயர புகை மூட்டமும் எழுந்தது.
MRT ரயிலில் இருந்து இழுத்து வெளியே போடப்பட்ட 2 நபர்கள்… மது போதையா? – இணையவாசிகள் குழப்பம்
நேற்று நவ.1 ஆம் தேதி, 1079 யூனோஸ் அவென்யூ 7 இல் ஏற்பட்டஇந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்ததாக அது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்து கொண்டது.
தீ சம்பவம் குறித்து மாலை 5:30 மணியளவில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக SCDF கூறியுள்ளது.
அங்குள்ள கட்டிடப் பொருட்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் தீயில் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது.
நான்காவது பிரிவின் பகுதி தீயினால் பாதிக்கப்பட்டது, ஆனால் தீ மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர்.
தீயணைப்பு பணிக்காக 16 அவசரகால வாகனங்களும் சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
தீயணைப்பு தொடர்பான பணிகள் இன்னும் தொடர்கின்றன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பது சமீபத்திய தகவல் மூலம் தெரியவந்தது.
திரு. ஜாந்து கோஷ் என்ற வெளிநாட்டு ஊழியர் தான் இருந்த இண்டஸ்ட்ரியல் பிரிவின் கூரைக்கு அருகில் உள்ள exhaust மின்விசிறியில் முதலில் தீப்பொறியைக் கண்டார்.
தீ வேறு பகுதிகளுக்கும் மடமடவென பரவியதைக் கண்ட திரு. ஜாந்து, விரைந்து சென்று தனது சக ஊழியர்களையும் அங்கிருந்து வெளியேறச் சொன்னார்.
“தொழிற்சாலையை விட்டு நாங்கள் விரைந்து வெளியேறினோம், ஆனால் அந்த 10 நிமிடங்களுக்குள், எங்கள் கண்களுக்கு முன்பாகவே தீ எரித்து நாசமாக்கியதைக் கண்டோம்,” என்று 45 வயதான பங்களாதேஷ் ஊழியர் திரு. ஜாந்து தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் இன்று (நவ.2) கூறினார்.

