[ad_1]
நிகழ்ச்சியில் உடல் ஆரோக்கியம் குறித்து அவர் பேசியதாவது,
உடல் நலன் என்பது வாழ்வின் அனைத்துவிதமான அழுத்தங்களிலும் துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கும் மனநிலையாகும்.
நீங்கள் செய்ய வேண்டியதை உங்களால் செய்ய முடிந்தால், அதுதான் உண்மையான உடற்தகுதியின் அளவுகோல். பைசெப்ஸ் அல்லது சிக்ஸ் பேக் வைத்து வயிற்றுப் பகுதியை உருவாக்குவது மட்டுமே உடற்தகுதி அல்ல.
நாடு முழுவதும் 10 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள ஒருங்கிணைந்துள்ளனர். இது தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் இத்தனை நபர்கள் உடல்நலனை பேணுவதற்காக ஒன்றுகூடுவது இதுவே முதல்முறை.
இதுபோன்ற அதிக முன்னெடுப்புகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒருமுறை செய்துவிட்டு விட்டுவிடக்கூடாது. இதனைத் தொடர வேண்டும். உடல் நலனைப் பேணுவதில் பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக உள்ளார். நான் அவரின் ரசிகன் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அவரை முன்னுதாரணமாகக் கருதுகிறேன். தற்போது, போதைப் பொருள்களுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.