சட்டவிரோத சூதாட்டம் மற்றும் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பது போன்றவற்றை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது அவர்கள் சுமார் $146,560க்கும் அதிகமான பணத்தையும், சூதாட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு நடவடிக்கையில் சட்டவிரோதமான சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காக 72 வயதான நபர் ஒருவரை கைது செய்தனர்.
மேலும் 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சுமார் $6,391 மதிப்புள்ள
பதிவு செய்யப்படாத சுகாதார பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

