• Login
Thursday, July 31, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

செல்ஃபி மோகம்.. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்.. உயிரை காப்பாற்றிய உள்ளூர் மக்கள்!

GenevaTimes by GenevaTimes
July 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
செல்ஃபி மோகம்.. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்.. உயிரை காப்பாற்றிய உள்ளூர் மக்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 30, 2025 7:24 AM IST

இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதன்முறை அல்ல என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

News18News18
News18

செல்ஃபி எடுக்கும்போது ஒரு குடும்பம் எதிர்பாராவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த உள்ளூர்வாசிகளும் மீனவர்களும் உடனடியாக செயல்பட்டு அவர்களை மீட்டதால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே உள்ள புகழ்பெற்ற பதிந்தா நீர்வீழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்தது.

எந்தவொரு சுற்றுலா இடத்திற்கு சென்றாலும், கையில் ஸ்மார்ட் போன் இருந்தால், மக்கள் உடனே ரீல்ஸ்கள், புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுக்கிறார்கள். இந்த செல்ஃபி மோகத்தால் ஏற்கனவே பலர் உயிரிழந்த சம்பவங்களை நாம் பல செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். இந்நிலையில் சமீபத்தில், ஜார்க்கண்டில் இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நடந்தது. செல்ஃபி எடுக்கும்போது ஒரு குடும்பம் நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டது.

நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, சமீபத்தில் மேற்கு வங்கத்தின் பர்தமான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் பட்டிண்டா நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றது. அங்கு, அவர்கள் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றனர். வேகமாக ஓடும் ஓடை அருகே செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, அவர்களில் ஒரு பெண் தவறுதலாக தண்ணீரில் தவறி விழுந்தார். அவள் தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட அவரது கணவர், மகன் மற்றும் மகள் ஆகிய 3 பேரும், அந்த பெண்ணை காப்பாற்ற ஆற்றில் குதித்தனர். ஆனால் பலத்த நீரோட்டம் காரணமாக, 4 பேரும் நீரில் மூழ்கத் தொடங்கினர். அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் இவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை கண்டு உடனடியாக உதவிக்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரில் குதித்து 4 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் ஒரு பாம்பு கூட இல்லாத மாநிலம் எது தெரியுமா..? 99% பேருக்கு தெரியாது..!

இந்த சம்பவம் பிரபலமான சுற்றுலா தலத்தில் பீதியை ஏற்படுத்தியது. வேகமாக ஓடும் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த மக்களின் உயிரைக் காப்பாற்ற உள்ளூர்வாசிகளும், மீனவர்களும் சரியான நேரத்தில் செயல்பட்டனர். இதனால் ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது. ஒரு மீட்புப் பணியாளர் கூறுகையில், சம்பவம் நடந்த நேரத்தில் நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று, மேலே இருந்து யாரோ விழுவதைக் கண்டோம். இதனையடுத்து உடனடியாக தண்ணீரில் குதித்து அவர்களைக் காப்பாற்றினோம். மீட்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதன்முறை அல்ல என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஏற்கனவே பதிண்டா நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்கும்போது பல விபத்துகள் நடந்துள்ளதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டு, செல்ஃபி எடுக்கும்போது 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர், அவர்களை உள்ளூர்வாசிகள் மீட்டனர் என்றும் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 30, 2025 7:24 AM IST

Read More

Previous Post

உயர்தர தொழிற்கல்வி பிரிவிற்கு சா/த பெறுபேறுகள் அவசியமில்லை

Next Post

10 ஆண்டுகளில் 127 மடங்கு அதிகரித்த இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி – மத்திய அரசு தகவல்!

Next Post
10 ஆண்டுகளில் 127 மடங்கு அதிகரித்த இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி – மத்திய அரசு தகவல்!

10 ஆண்டுகளில் 127 மடங்கு அதிகரித்த இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி - மத்திய அரசு தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin