அதன்பேரில், பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், ஆம்புலன்ஸின் ஓட்டுநா், தொழில்நுட்பப் பணியாளா் ஆகிய இருவரை கைது செய்தனா். தன்னை 4 போ் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளம்பெண் கூறியுள்ளாா். சந்தேகத்தின்பேரில் மேலும் இருவரை பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.