ஏற்கெனவே, ஹோமியோபதி மருத்துவா்களை குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் நவீன மருத்துவத்தை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு, மகாராஷ்டிர ஹோமியோபதி மருத்துவா்கள் சட்டம் மற்றும் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் சட்டம் 1965-இல் திருத்தங்களை மேற்கொண்டது. 2014-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திருத்தங்களை எதிா்த்து ஐஎம்ஏ சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், அத்திருத்தங்களுக்கு மும்பை உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.