• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஊழியர்கள் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்… ஆந்திராவைத் தொடர்ந்து தெலங்கானாவில் புதிய விதி

GenevaTimes by GenevaTimes
July 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஊழியர்கள் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்… ஆந்திராவைத் தொடர்ந்து தெலங்கானாவில் புதிய விதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 06, 2025 5:40 PM IST

தெலங்கானாவில், அனைத்து வணிக நிறுவனங்களில் (கடைகள் தவிர) ஊழியர்கள் தினமும் 10 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும்.

News18News18
News18

தெலங்கானாவில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் (கடைகள் தவிர்த்து), ஊழியர்கள் தினமும் 10 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தெலங்கானா தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின் முதன்மைச் செயலாளர் அரசாணையை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தெலங்கானா அனைத்து வணிக நிறுவனங்களிலும் (கடைகள் தவிர்த்து), ஊழியர்கள் தினமும் 10 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும். இருப்பினும், வாரத்திற்கு மொத்த வேலை நேரம் 48 மணி நேரத்தை தாண்டக் கூடாது.

48 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு, கட்டாயமாக கூடுதல் நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஒரு ஊழியர் ஒரே நாளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தால், குறைந்தது 30 நிமிடம் ஓய்வு வழங்க வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும், கூடுதல் நேரம் உட்பட ஒரு நாளில் 12 மணி நேரத்தை தாண்டக் கூடாது. புதிய விதிகள் படி, ஒரு காலாண்டிற்கு (மூன்று மாதங்களுக்கு) கூடுதல் நேர வேலை 144 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும். இந்த உத்தரவு வரும் ஜூலை 8 ஆம் தேதி அரசிதழில் வெளியான பிறகு அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆந்திராவில் ஒரு நாளைக்கு 10 மணி நேர வேலை நேரம் என அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பவே, அதில் இருந்து அரசு பின்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 06, 2025 5:40 PM IST

Read More

Previous Post

மகளின் திருமணத்தில் நடனமாடியவர் மயங்கி விழுந்து மரணம்

Next Post

பிரிக்ஸ் அமைப்பு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி | Makkal Osai

Next Post
பிரிக்ஸ் அமைப்பு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி | Makkal Osai

பிரிக்ஸ் அமைப்பு சக்திவாய்ந்த அமைப்பாக இருக்கிறது: பிரதமர் மோடி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin