• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“மராத்தியை மதிக்கிறோம்; அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது” – மகாராஷ்டிரா முதல்வர்

GenevaTimes by GenevaTimes
July 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“மராத்தியை மதிக்கிறோம்; அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது” – மகாராஷ்டிரா முதல்வர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 04, 2025 8:30 PM IST

“நாங்கள் மராத்தியை மதிக்கிறோம், ஆனால் அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது” என மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

ஃபட்னாவிஸ்ஃபட்னாவிஸ்
ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், கடைக்காரர் ஒருவர் மராத்தி மொழியில் பேசவில்லை என அவரை தாக்கியது தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், வன்முறையில் ஈடுபடாமல் மராத்தியை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நாங்கள் மராத்தியை மதிக்கிறோம், ஆனால் அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் எந்த மொழியையும் அவமதிக்க அனுமதிக்க மாட்டோம்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற மொழிப் பிரச்சினையை யாராவது உருவாக்கினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் மராத்தியைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த வழியில் இந்தியாவின் எந்த மொழிக்கும் அநீதி இழைக்கப்பட முடியாது; இதை மனதில் கொள்ள வேண்டும். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஃபட்னாவிஸ் கூறினார்.

மும்பைக்கு அருகிலுள்ள மீரா சாலையில் ‘ஜோத்பூர் ஸ்வீர் ஷாப்’ நடத்தி வரும் பாபுலால் சவுத்ரி என்ற 48 வயது கடைக்காரர், மராத்தியில் பேசுவது ஏன் கட்டாயம் என்று கேட்டதற்காக ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, இன்று அம்மாநில முதல்வர் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 04, 2025 8:30 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா

Next Post

பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்… பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு?

Next Post
பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்… பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு?

பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்... பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin