படிக்கும் காலத்திலேயே ஐஐஎஸ்சி பெங்களூரு, பேஸ்புக், கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் ஆய்வுகளில் இன்டெர்ட்ன்ஷிப் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார் த்ராபித்.
2017ம் ஆண்டு ஓபன் ஏஐயில் இன்டெர்ன்ஷிப் பணியை மேற்கொண்ட இவர், அதே நிறுவனத்தில் முதல் முழு நேர வேலையிலும் சேர்ந்துள்ளார். அங்கே முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
த்ராபித் பன்சால் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களை ஓபன் ஏஐயிலிருந்து தங்கள் நிறுவனத்தில் சேர்க்க 100 மில்லியன் டாலர் வழங்கப்படுவதாக சாம் அல்ட்மேன் குற்றம்சாட்டியுள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் தரப்பில் இந்த கூற்றை மறுத்துள்ளனர். ஆல்ட்மேன் மிகைப்படுத்திக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர்.