இன்றைய பாட்னா என்று அழைக்கப்படும் பாடலிபுத்திரத்தின் சிறப்பை நவீன நீராதாரங்களைக் கொண்ட ஒரு பரந்த நகரம் என்று கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் வர்ணித்துள்ளார்.
சூரிய சித்தாந்தம் மற்றும் பிரம்ம குப்தரின் பிரம்மபூத சித்தங்கா போன்ற நூல்களில் இருந்த ஆவணங்கள், கட்டடக் கலையில் இந்தியா சிறந்துவிளங்க பெரிதும் உதவின. ஈரான் அறிவியலாளர் அல் புரூனி இந்தியாவின் கட்டடக்கலையைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
பூமியின் காந்தப் புலன்கள் மற்றும் சூரிய சக்தியைக் கருத்தில்கொண்டு உருவான 5,000 ஆண்டுகள் பழைமையான வாஸ்து சாஸ்திரம் நம் கட்டடக்கலை மரபுகளில் ஒன்று.
காற்றோட்டம், ஒளி மட்டுமின்றி இயற்கை பேரிடர்களைத் தாங்கும் வகையில் பெரும்பாலான கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்தில் உள்ள எல்லோரா குகைகள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், குஜராத்தில் உள்ள ராணி படிக்கிணறு, ஆந்திரத்தில் உள்ள லேபாக்ஷி தொங்கும் தூண்கள், தில்லி இரும்புத்தூண் ஆகியவை சுவாரசியத்துடன் தொழில்நுட்பத்தையும் கலைப் படைப்பாற்றலையும் நிரூபிக்கின்றன.