முன்னதாக 10 மில்லியன் கோல்ட் கார்டுகள் விற்கப்பட்டால் அமெரிக்காவுக்கு 50 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கும் எனப் ரம்ப். ஆனால் லுட்னிக் 2 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டால் 1 ட்ரில்லியன் டாலர் முதலீடு வந்துசேரும் என சிறிய இலக்கையே எதிர்பார்த்துப் பேசியுள்ளார்.
எழும் கேள்விகள்jg
அமெரிக்க அரசு முன்மொழிந்துள்ள இந்த திட்டத்துக்கு பல்வேறு சட்டரீதியான சவால்கள் எழுந்துள்ளது. டைம்ஸ் நவ் தளம் கூறுவதன்படி, குடியேற்ற நிபுணர்கள் மற்றும் சட்டக் குழுக்கள், “ஜனாதிபதி ஒருதலைபட்சமாக EB-5 திட்டத்தை மாற்றியமைக்கவோ, நீக்கவோ முடியாது, காங்கிரஸ் அதை ரத்து செய்யாவிட்டால் அல்லது ஒரு புதிய அல்லது திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றும் வரை பழைய திட்டமே செயல்பாட்டில் இருக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.” எனக் கூறியிருக்கின்றனர்.
ஏற்கெனவே உலகில் உள்ள மில்லியனர்களில் 37% பேர் அமெரிக்காவில்தான் உள்ளனர். இந்தியா குடியேற்ற முதலீடுகளை மேற்கொள்வதில் முன்னணி நாடுகளில் ஒன்று.
ஐரோப்பிய நாடுகள் குடியேற்ற முதலீடுகளில் நெறிமுறைகளை இறுக்கி வரும் சூழலில் அமெரிக்கா, இந்தியர்களுக்கு மறுக்க முடியாத தேர்வாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

