Last Updated:
சேலம் மாவட்டத்தில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியிருக்கிறது இதன் காரணமாக வியாபாரமும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் களைக்கட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து பலாப்பழ சீசனும் துவங்கி இருக்கிறது. பலாப்பழத்திற்கு புகழ் பெற்ற ஊர் பண்ருட்டி.இங்கு, பலாப்பழம் சாகுபடி செய்யப்படுவதுடன், பண்ருட்டி பலாப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், சந்தையில் தனி மதிப்பு பெற்றதாகவும் உள்ளது. பண்ருட்டி பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு உள்ளது. எனவே, பலாப்பழத்திற்கு பெயர் பெற்ற பண்ருட்டியிலிருந்து பலாப்பழம் அதிகளவில் வரத்து வந்து கொண்டிருக்கிறது எனினும், வியாபாரிகள் நேரடியாகவும் சென்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். சேலம் சந்தையிலிலும் மற்றும் சாலையோர கடையிலும் விற்பனை செய்து வருகின்றனர் வியாபாரிகள்.
பலாப்பழ விற்பனை குறித்து வியாபாரிகள் கூறியதாவது; ” சேலம் மாவட்டத்தில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி சக்க போடு போட்டு வருகிறது. நாங்கள் இந்த பலாப்பழத்தை பண்ருட்டில் இருந்து நேரடியாக கொண்டு செய்து விற்பனை செய்து வருகிறோம். பலாப்பழத்திற்கு உலகப் புகழ்பெற்றது பண்ருட்டி என்பது அனைவரும் அறிந்த விஷயம். பண்ருட்டி பலத்திற்கென்று தனி ருசியும், தரமும் உள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் அங்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருகிறோம்.
பலாப்பழத்தைப் பொறுத்தவரையிலும் தூபாகெரே ரெட், பிரகாஷ் சந்திரா, ருத்ராக்ஷி, சங்கர், சித்து, லால்பாக் மதுர், அம்பலி போன்ற பல ரகங்களிலும் உள்ளது. ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சுவையுடன் காணப்படும். இதனிலும் மேலாக பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி6 மற்றும் பி12 போன்ற பல்வேறு சத்துகளும் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மற்றும் இரத்த சோகை வராமல் தடுக்கிறது.
இதனை அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும். நாங்கள் பலாப்பழம் கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும் விற்பனை செய்கிறோம். பலாப்பழ சீசன் துவங்கி இருக்கின்ற காரணத்தால் பொதுமக்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர். வியாபாரமும் நன்றாக தூங்கி இருக்கிறது” என்றார் பழ வியாபாரி.
Salem,Salem,Tamil Nadu

