• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: பவுன் ரூ.52 ஆயிரத்தை எட்டி புதிய உச்சம் | gold price touched 52,000

GenevaTimes by GenevaTimes
April 4, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: பவுன் ரூ.52 ஆயிரத்தை எட்டி புதிய உச்சம் | gold price touched 52,000
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மாதம் 9-ம் தேதி ரூ.49 ஆயிரம், 28-ம் தேதி ரூ.50 ஆயிரம், 29-ம் தேதி ரூ.51 ஆயிரம் என வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.6,500-க்கும் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52,000-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் பவுன் ரூ.55,760-க்கு விற்பனையாகிறது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.84-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.84,000 ஆக உள்ளது.

தங்கம் விலை அதிகரித்து வருவது குறித்து நகை வியாபாரிகள் கூறும்போது, “சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவைஅதிகரித்துள்ளது. மேலும், ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது அத்துடன், உள்நாட்டில் மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதால், பங்குச் சந்தைகளிலும் அதிகளவில் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இத்தகைய காரணங்களால் தங்கம்விலை அதிகரித்து வருகிறது” என்றனர். தங்கம் விலை அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Read More

Previous Post

கிரிக்கெட் உலகில் தகர்க்க முடியாத 10 வரலாற்று சாதனைகள்.. இப்படி எல்லாம் ஒரு சாதனை இருக்கா

Next Post

பூமி பிளந்து புதிய கடல் உருவாகிறதா?

Next Post
பூமி பிளந்து புதிய கடல் உருவாகிறதா?

பூமி பிளந்து புதிய கடல் உருவாகிறதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin