இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்கா லாபம் ஈட்டுவதற்காகவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில,“கடந்த 100 ஆண்டுகளில், அமெரிக்கா 260 போர்களை நடத்தியிருக்கிறது. அதே நேரத்தில் சீனா மூன்றில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிமுக்கிய வருவாய். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து மோதல்களை உருவாக்குகிறார்கள். அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். சிரியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகள் ஒரு காலத்தில் வளமானவை. ஆனால் இப்போது போர்களால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளன.

