’மடியில் கனம் வழியில் பணம்’
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்லாயிரம் கோடிகளை கோல்மால்புர கொள்ளைக் கும்பல் வாரிச் சுருட்டியது அம்பலமானதும், டெல்லி பாணியில் நடைபெறப் போகும் கைது படலங்களுக்கு பயந்து நடுங்குவது, எட்டப்பன் ரகுபதியின் வார்த்தைகளில் இருந்து தெரிகிறது. தமிழ் நாட்டில் சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை மத்திய அரசின் தன்னிச்சை அதிகாரம் பெற்ற புலனாய்வுத் துறைகளின் (சி.பி.ஐ / இ.டி) விசாரணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ தமிழக அரசே வழக்குத் தொடுக்காத நிலையில், விடியா திமுக அரசு கனிம வளக் கொள்ளை வழக்கில் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்டும், மற்றும் சாட்சிகளை விசாரிக்கக்கூடாது என்றும், டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணையை எதிர்த்தும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்ததில் இருந்தே ‘மடியில் கனம், வழியில் பயம்’ என்பது தமிழக மக்களுக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

