உடனடியாக செயல்படுங்கள்: நேரம் மிகவும் முக்கியமானது
எதேச்சையாக நீங்கள் தவறான UPI ID-க்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டால் அதற்கான நடவடிக்கையை நீங்கள் உடனடியாக எடுப்பது அவசியம். எனவே, நீங்கள் செய்த டிரான்சாக்ஷனை ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்து நிரூபணமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக உங்களுடைய வங்கிக்கு போன் செய்தோ அல்லது நேரடியாக சென்றோ விஷயத்தைக் கூறி முழு டிரான்சாக்ஷன் விவரங்களை வழங்குங்கள்.
மாறாக நீங்கள் 1800-120-1740 என்ற எண்ணுக்கு அழைத்து, நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் புகார் அளிக்கலாம். இதனை நீங்கள் டிரான்சாக்ஷன் செய்த 3 நாட்களுக்குள் செய்ய வேண்டும். எவ்வளவு விரைவாக நீங்கள் புகார் அளிக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக உங்களுடைய பணத்தைத் திருப்பிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
NPCI-ன் குறைதீர்வு வழிமுறை:
UPI சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காகவே NPCI பிரத்யேகமான குறைதீர்வு பொறிமுறையை வழங்குகிறது. இதன் மூலமாக ஒரு புகாரை எழுப்புவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
‘பர்சன் டு பர்சன்’ அல்லது ‘பர்சன் டு மெர்ச்சன்ட்’
பின்வரும் விவரங்களை நிரப்புங்கள்
இது சம்பந்தமாக NPCI விசாரணை நடத்தி உங்களுடைய பணத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
உங்களுடைய UPI வரம்புகள் பற்றி தெரிந்து கொள்ளுதல்:
ஒருவேளை NPCI உங்களுடைய பிரச்சனையைச் சரி செய்யாவிட்டால்?
உங்களுடைய வங்கி அல்லது NPCI 30 நாட்களுக்குள் இந்தப் பிரச்சனையைச் சரிசெய்யாத பட்சத்தில், இந்தப் பிரச்சனையை நீங்கள் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வங்கிகள் ஓம்புட்ஸ்மான் அதிகாரிக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவர் உங்களுக்கும், வங்கிக்கும் இடையே ஒரு தன்னிச்சையான மத்தியஸ்தராக இருந்து அடுத்த 30 நாட்களுக்குள் உங்களுடைய புகாரைத் தீர்த்து வைப்பார்.
இதற்கான புகார்களை நீங்கள் ஆன்லைனில் RBI அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் சமர்ப்பிக்க வேண்டும். டிஜிட்டல் பேமெண்டுகள் அதிக அளவில் செய்யப்பட்டு வரும் இந்தச் சமயத்தில், உங்களுடைய உரிமைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
தவறான நம்பருக்கு யூபிஐ பேமென்ட் பண்ணிட்டீங்களா…? பணம் திரும்ப கிடைக்க இத மட்டும் பண்ணா போதும்…!

