கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் இன்று பிற்பகல் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது மலாக்கா மாநிலம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது அத்துடன் பினாங்கிலும் கட்டிடங்கள் அதிர்ந்தன.
ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) படி, உள்ளூர் நேரப்படி மாலை 4.57 மணிக்கு 89 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இருப்பினும் “மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் விடப்படவில்லை.
மேலும் “தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது,” என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


