முன்னணி இந்திய முதலீட்டாளர்களை பொருத்தவரை ஃபிக்சட் டெபாசிட்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் டிரேட் ஃபண்டுகள் (ETFs) போன்றவை பிரபலமானவையாக உள்ளன. பாரம்பரிய முதலீட்டாளர்கள் ஃபிக்சட் டெபாசிட்கள் பற்றிய பாதுகாப்பை பற்றி கூறும்போது, நவீன பொருளாதார ஆலோசகர்கள் மியூச்சுவல் ஃபண்ட் SIPகளுக்கு சாதகமாக பேசுகின்றனர்.
தற்போது வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. மேலும் கடந்த 6 மாதங்களாகவே மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ETFகளும் எதிர்மறையான ரிட்டன்களை கொடுத்து வருகின்றன. ஆகவே, பொருளாதார கருவிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
ஃபிக்சட் டெபாசிட்கள்:
வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFC) ஒரு பெரிய அளவிலான தொகையை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் டெபாசிட் செய்வது ஃபிக்சட் டெபாசிட்கள் ஆகும். இதில் உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன் மற்றும் வரி சேமிப்பு பலன்கள் கிடைக்கிறது. எனினும் ஃபிக்சட் டெபாசிட்கள் மூலமாக கிடைக்கும் ரிட்டன்கள் பற்றி பேசும்போது, அதில் கிடைக்கும் வட்டி பணம் முழுவதுமாக வரிக்கு உட்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த டெபாசிட்டை முன்கூட்டியே வித்டிரா செய்யும் பட்சத்தில் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகள்:
இதில் வழக்கமான முறையில் சிறிய அளவிலான முதலீடுகளை செய்வீர்கள். இது ஒரு நீண்ட கால திட்டமாக அமைகிறது. இதில் நீங்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு வட்டி கொடுக்கப்பட்டு, பிறகு மொத்த பணத்திற்கும் மீண்டும் வட்டிக்கு வட்டி என்ற கணக்கில் உங்களுக்கு வழங்கப்படும். எனினும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.
பெரும்பாலான ஆலோசகர்கள் ஏன் SIPகளை விரும்புகின்றனர்?
SIP-களில் ரிஸ்க் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் பெரிய அளவிலான செல்வத்தை சேமிப்பதற்கு இந்த பொருளாதாரக் கருவி உதவியாக இருக்கின்றது. ஓய்வு காலம், வீடு வாங்குவது அல்லது குழந்தைகளுக்கான கல்வி போன்ற நீண்ட கால செல்வ சேமிப்புக்கு SIPகள் சிறந்த ஆப்ஷன்களாக இருக்கின்றன என்று ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிக்க: அள்ளித் தரும் அட்சய திருதியை.. தங்கம் வாங்க புதிய திட்டத்தை அறிமுகம் செய்த Paytm!
எக்ஸ்சேஞ்ச் டிரேடெட் பண்டுகள் (ETF):
ETFகளை பொறுத்தவரை பங்கு சந்தைகளில் ஸ்டாக்குகளை போல உங்களுடைய பணத்தை டிரேடு செய்ய வேண்டும். இது மியூச்சுவல் ஃபண்டுகளை விட குறைவான செலவு கொண்டது என்பதால் பலர் ETFகளை தேர்வு செய்கின்றனர். எனினும் இதில் முதலீடு செய்வதற்கு ஒரு டிமேட் அக்கவுண்ட் அவசியம் மற்றும் சந்தை பற்றிய அறிவு திறன் கட்டாயமாக இருக்க வேண்டும்.
எனவே நீண்ட கால சே பொருளாதார திட்டமிடலுக்கு நாம் எந்த பொருளாதார கருவியை தேர்வு செய்ய வேண்டும்?
எந்த ஒரு குறிப்பிட்ட பொருளாதார கருவியும் உங்களுடைய அனைத்து பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்யாது. எனவே அவசரகால மற்றும் குறுகிய கால இலக்குகளுக்கு ஃபிக்சட் டெபாசிட்களை தேர்வு செய்யுங்கள் (1 முதல் 3 வருடங்கள்). நீண்ட கால இலக்குகளுக்கு (5 முதல் 20 வருடங்களுக்கு) மியூச்சுவல் ஃபண்ட் SIPகள் சிறந்ததாக இருக்கும் மற்றும் உங்களுடைய செல்வ வளத்தை அதிகரிப்பதற்கு ETFகளை தேர்வு செய்யலாம். சரிவிகித அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் உங்களுடைய இந்த பொருளாதார திட்டத்தை பாதுகாப்பாக அமைக்கலாம்.
April 26, 2025 11:19 PM IST

