இதன் விளைவாக, மேயா் மற்றும் துணை மேயா் தோ்தலில் வாக்களிக்கும் தோ்வுக் குழுவில் 238 கவுன்சிலா்களும், 7 மக்களவை எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள், தில்லி பேரவைத் தலைவரால் நியமிக்கப்பட்ட 11 பாஜக மற்றும் 3 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனா். இதில், நடப்பாண்டு மேயா் தோ்தலை ஆம் ஆத்மி புறக்கணிப்பதாக திங்கள்கிழமை அறிவித்தது.

