Last Updated:
நடப்பாண்டில் தற்போது வரை 125 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 28,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புத்தாக்க நிறுவனங்கள் தொடங்க உகந்த சூழல் கொண்ட 3 ஆவது மிகப்பெரிய நாடான இந்தியாவில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருவதாக, தரவுகளை ஆய்வு செய்யும் தன்னார்வ அமைப்பான TRACXN (டிராக்சன்) தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டில் 15,921 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் மூடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதே போன்று, கடந்தாண்டிலும் 12,717 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டதாக தன்னார்வ அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2019 முதல் 2022 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 12 மடங்கு அதிகமாகியுள்ளது.
கடந்த 4 மாதங்களில் 259 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாக கூறியுள்ள தன்னார்வ அமைப்பு, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடன் சுமையால் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதே போன்று, கடந்த 2019 முதல் 2022 ஆம் ஆண்டுகள் வரை, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9,600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நிலையில், கடந்தாண்டில் 5,264 புத்தாக்க நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: உங்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறதா? நீங்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.. எச்சரிக்கும் சிஇஓ!
நடப்பாண்டில் தற்போது வரை 125 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தன்னார்வ அமைப்பு, விவசாயம், நிதி சார்ந்த தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களே அதிக அளவில் மூடப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
April 24, 2025 1:24 PM IST
“இந்தியாவில் 2 ஆண்டுகளில் 28,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது…” – வெளியான அதிர்ச்சி தகவல்


