பூமி தினத்தை முன்னிட்டு, தனது ‘சுற்றுச்சூழல், சமூக, நிா்வாக’ (இஎஸ்ஜி) கொள்கையை பரோடா வங்கி வெளியிட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் (படம்), வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ், ‘நமது சக்தி, நமது பூமி’ என்ற கருப்பொருளுடன் புதுபிக்கத்தக்க எரிபொருளுக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற பல்வேறு செயல்திட்டங்களை வங்கி வகுத்துள்ளது.

