Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி உயர்வு காரணமாக இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் 931 புள்ளிகள் சரிந்து 75,365 புள்ளிகளில் முடிவடைந்தது. 11 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில், ஏறத்தாழ 11 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளில் இல்லாத அளவில் உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி உயர்வு இந்திய பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வாரத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 931 புள்ளிகள் சரிவை சந்தித்து 75 ஆயிரத்து 365 புள்ளிகளில் நிறைவுபெற்றது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 346 புள்ளிகள் சரிவை கண்டு 22 ஆயிரத்து 904 புள்ளிகளில் நிலைபெற்றது. Tata Motors, Larsen & Toubro, Adani Ports, IndusInd வங்கி, Tech Mahindra, Reliance Industries, Sun Pharmaceutical, HCL Technologies, Tata Consultancy Services, Infosys உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் பங்குகளின் விலை கடும் சரிவை சந்தித்தன.
நிப்டியில் பாரமெடிக்கல் துறையும் 4 சதவீத அளவுக்கு மூலதன சந்தை மதிப்பை இழந்தது. பங்குச் சந்தை வீழ்ச்சியால் ஏறத்தாழ 11 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
April 04, 2025 10:22 PM IST


